ஜனாதிபதியின் கொள்ளை பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் தொடர்பில் அறிவிப்பு!

ஜனாதிபதியின் கொள்ளை பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 9, 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இதுதொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 10ஆம் திகதியும் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *