மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளிக்கத் தவறியதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டின் பெரும்பான்மையான பொதுப் பிரச்சினைகள் டிசம்பர் வரை தொடரும் என்பதையே ஜனாதிபதியின் சிம்மாசன உரை தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் உரையில் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கப்படவில்லை என்பது கேள்விக்குரியாகியுள்ளது.
டிசம்பர் மாதம் வரை எரிபொருள் நெருக்கடி தொடரும் எனவும், இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எரிபொருள் தட்டுப்பாட்டினால் அரச சேவை மற்றும் ஏனைய தொழில்களும் தடைபடும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
பிறசெய்திகள்