நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு அண்மையில் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போன்ற தொலைதூர பிரதேசங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவுக்காக ஏறக்குறைய இரண்டு இலட்சமும் ஏனைய பிரதேசங்களிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.
தற்போதைய எரிபொருளின் விலையில், இந்த தொகையில் ஒரு எம்.பி.க்கு சுமார் 400 லீற்றர் எரிபொருளை வழங்க முடியும்.
நாட்டில் செயல்படும் கோட்டா முறையின்படி, எந்த வாகனப் பிரிவினருக்கும் இவ்வாறான மாதாந்திர அளவு எரிபொருள் வழங்கப்படுவதில்லை.
பிறசெய்திகள்