ஜனாதிபதி கூறியதை நடைமுறைப்படுத்துவதில் சவால்- தயாசிறி கருத்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ராஜசனா உரையில் மிகவும் மிதமான உரையை நிகழ்த்திய போதும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சவாலே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் உரையானது நாட்டின் பிரச்சினைகளையே மையப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்

இது மற்றுமொரு சிம்மாசனப் பேச்சாக இருக்காது என தாம் நம்புவதாகவும், நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சர்வகட்சி அரசாங்கத்தை முன்மொழிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் எனவும், பதவிகளை பெற்றுக் கொண்டு செயற்படுவதா என்பது தொடர்பில் கட்சி என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *