திருகோணமலை மாவட்டம் ,கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுந்தீவு பிரதேசத்தில் நீண்ட கால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்த பிரதான நீர் குழாய் இணைப்புடன் சேர்த்து சமுர்த்தி பயனாளிகள் மற்றும் சமுர்த்தி அற்ற குடும்பங்கள் 25 க்கான குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு நேற்று (03) நெடுந்தீவு ஐக்கிய மக்கள் சக்தியின் பொறுப்பாளர் சஹ்ஜீர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கலந்து கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தார்.
இதன்போது பிரதேச இளைஞர் கழகத்துக்கான விளையாட்டு உபகரணங்களும், கிராமிய அபிவிருத்தி சங்கத்துக்கான புல்வெட்டும் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ரஹீம் மௌளவி (ஆசிரியர் ), சிராஜ் (தேசிய இளைஞர் படையணி) உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


பிறசெய்திகள்