
கொழும்பு, ஓக 4
எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு ஆவணி திருவிழாவை முன்னிட்டு விசேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும், அநுராதபுரத்தில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும் எதிர்வரும் 13ஆம், 14ஆம், மற்றும் 15 ஆம் திகதிகளில் மடு ஆவணி திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மடு ஆவணி திருவிழா தொடர்பான முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முன் ஆயத்த கலந்துரையாடல் நேற்று முன்தினம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருவார்கள் என்ற காரணத்தால் விசேட ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.