இங்கிலாந்திற்கு சென்ற மற்றுமொரு இலங்கை வீரரும் மாயம்!

இங்கிலாந்தில் நடைபெறும் 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சென்றுள்ள மற்றுமொரு இலங்கையரும் மாயமாகியுள்ளார்.

இலங்கையின் மல்யுத்த அணியைச் சேர்ந்த வீரர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன தடகள வீரர் எதிர்வரும் 6ஆம் திகதி மல்யுத்த போட்டியின் முதல் சுற்று போட்டியில் பங்கேற்கவிருந்தார்.

முன்னதாக இலங்கை ஜூடோ வீரர் ஒருவரும் ஜூடோ அணியின் அதிகாரி ஒருவரும் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போன மல்யுத்த வீரர் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் பொதுநலவாய விளையாட்டு மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டார் பின்னர் அவர் இரண்டாவது சீரற்ற சோதனையில் தேர்ச்சி பெற்ற பிறகு விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் இலங்கை அணி நிர்வாகம் அவரை மையத்திலிருந்து அழைத்துச் செல்ல வந்தபோது​​தடகள வீரர் காணால் போயிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொதுநலவாய விளையாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் காணாமல் போன இலங்கை தடகள வீரர் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *