யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட நயினாதீவு , அனலை தீவு , நெடுந்தீவு ஆகிய தீவுகளை இணைத்து இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளத் திட்டத்தை 10 மாதங்களில் நிறைவுறுத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
நயினாதீவில் 1.34 ஹெக் டேர் , அனலைதீவில் 2.8 ஹெக்டேர் , நெடுந்தீவில் 4.86 ஹெக்டேர் நிலப்பரப்பு குறித்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே மூன்று தீவுகளிலும் சீன அரசாங்கத்தினால் குறித்த திட்டம் நடை முறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்ற நிலையில் குறித்த திட்டத்தினால் இந்தியா இலங்கை நலனில் பாதிப்புகள் ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர் .
நெடுந்தீவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் சுமார் முப்பது கடல் மைல் தூரமே உள்ள நிலையில் குறித்த திட்டத்தை சீனா நடைமுறைப்படுத்தி னால் தமிழ்நாட்டின் கூடங்குள அணு மின் நிலையத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் இந்திய தரப்பால் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாக இத்திட்டம் இந்தியாவிடமே கையளிக்கப்பட்டது .
இந்நிலையில் குறித்த திட்டத்தை இந்திய அரசாங்கம் நன்கொடையாகவே நடை முறைப்படுத்த உள்ள நிலையில் அதற்கான ஒப்பந்தம் கேள்வி மனுக் கோரலின் பிரகாரம் இந்தியா நிறுவனம் ஒன்றிற்கே வழங்கப்படவுள்ளது .
இந்தியா அரசினால் மூன்று தீவுகளில் செயல்படுத்தப்படுகின்ற மீள் புதுப்பிக்க சக்தி வளத்திட்டத்தின் பிரதான திட்டங்களாக சோலர் காற்றாலை , மின் பிறப்பாக்கி மற்றும் மின் சேமிப்பான் போன்றவை பிரதான இடத்தை வகிக்கின்றது .
குறித்த திட்டத்துக்கான கட்டமைப்பு மாதிரி படங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்ட நிலையில் திட்டம் செயற்படுத்தவுள்ள பகுதிக ளுக்கு இலங்கை – இந்திய அதிகாரிகள் இரு தடவைகள் கள விஜயம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர் .
இந்நிலையில் திட்டத்தை 10 மாதங்களில் முடிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது .
பிறசெய்திகள்