
இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்குள் 163 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ரோஹான் அமரசேகர தெரிவித்தார்.
இதனையடுத்து, இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் இப் பணிகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமெனவும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக,டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களையும் அதனை உற்பத்தியாக இடமளித்த வியாபார நிலைய உரிமையாளர்களுக்கும் பல வீட்டின் உரிமையாளர்களுக்கும் 15 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சிவப்பு எச்சரிக்கை கடிதங்கள் 300 அளவில் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி ரோஹான் அமரசேகர மேலும் தெரிவித்தார்.
பிறசெய்திகள்