இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் தென்னிலங்கையில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்த போராட்டக்காரர்களும் சட்ட விரோதமான செயல் என கைது செய்யப்பட்டிருந்தனர்.எனவே இதனை கண்டித்து நாளைய தினம் எதிர்ப்பு போராட்டத்தினை நடாத்த உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது ;
ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அதேபோன்று கடந்த காலங்களில் போராட்டங்களில் அர்ப்பணிப்புடன் போராடியவர்களை கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
இந்த செயற்பாடுகள் கோட்டாபயராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னரே இவ்வாறு நடக்கின்றன.
இதனை கடுமையாக கண்டிக்கின்றோம் .நாளைய தினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாண பஸ் தரிப்புக்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்த தீர்மானித்து இருக்கின்றோம்.
அந்தவகையில் இந்த ஜனநாயகத்தினை மறுக்கின்ற,சட்டங்களை மறுக்கின்ற ,சட்ட மன்ற கோணத்தில் நிலை நிறுத்த விரும்புகின்ற இந்த ஆடசி அடக்கு முறைக்கு எதிராக போராட விரும்புகின்ற தென்னிலங்கை மக்களையும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ரணில் விக்கிரமசிங்க இந்த போராட்டக்காரர்களை வேட்டையாடினது என்பது கண்டிக்கத்தக்க விடயமாகும் .அவர் தன்னை ஒரு லிபரல்வாதியாக காட்டிக்கொள்ள விரும்பினாலும் ,அவருக்கென ஒரு கொள்கை கிடையாது.அவரின் காட்டிக்கொள்கின்ற கொள்கைக்கு மாறாக தன்னுடைய இலக்கினை அடைவதற்கு மக்கள் மத்தியில் சட்டவிரோத செயல்களை முன்னெடுப்பதற்கு எந்த எல்லைக்கும் போக தயங்க மாட்டார் .
இது ஒரு ஆடசி மாற்றம் அல்ல.ஆள் மாற்றம் .தற்போதைய பாராளுமன்றம் இருக்கும் வரையில் மக்களுடைய ஜனநாயக விருப்பங்கள் எக்காரணங்கள் கொண்டும் கடைப்பிடிக்க மாட்டார்கள் ,என்பதனை அனைத்து மக்களுக்கும் கூறிக்கொள்கிறோம் என்றார்.
பிறசெய்திகள்