பெத்தும் கேர்னரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு உத்தரவு!

சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுலுவல உத்தரவிட்டுள்ளார்.

இவர் தொடர்பான வழக்கு இன்று (04) விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறக்கப்பட்டது.

இதன்போது பெத்தும் கேர்னர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தனது கட்சிக்காரரின் புகைப்படங்கள் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் அணிவகுப்பு நடத்துவதற்கு சட்டரீதியில்லை என சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், குறித்த ஆட்சேபனையை நிராகரித்த மேலதிக நீதிவான் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *