ரயில்வேயின் புதிய பொது முகாமையாளராக குணசிங்க நியமனம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இரண்டு முன்னணி பொதுத்துறை நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்துள்ளார்.

அதன்படி, டபிள்யூ.ஏ.டி.எஸ். இலங்கை திட்டமிடல் சேவையில் (SLPS) அனுபவம் வாய்ந்த விசேட தர அதிகாரியான குணசிங்க, ரயில்வேயின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவையின் (SLAS) விசேட தர அதிகாரி நிஷாந்த அனுருத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் ஜனாதிபதியின் கூடுதல் செயலாளர்களாக பதவி வகித்துள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அமைச்சர் குணவர்தனவினால் இன்று காலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *