எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சிறிலங்கா கடற்பரப்பில் பணம் செலுத்த முடியாமல் பல நாட்களாக நங்கூரமிட்டிருந்த 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பலுக்கு நேற்று பணம் வழங்கப்பட்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், ஒரு வருட காலத்துக்குத் தேவையான விமான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றைய தினம் பணம் செலுத்தப்பட்டதையடுத்து கப்பலில் இருந்து டீசல் இறக்கும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, மற்றுமொரு பெட்ரோல் கப்பலுக்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *