திருகோணமலை கடற்பகுதியில் அனர்த்தத்திற்குள்ளான 3 மீனவர்களையும் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது, குறித்த மீனவர்கள் கடலில் வீழ்ந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட கடற்படையினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த மீனவர்கள் திருகோணமலை சீனன் குடா மற்றும் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படை குறிப்பிட்டுள்ளது.
பிறசெய்திகள்