எங்களுடைய சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்,அவர்களுக்கு விடுதலையினை பெற்றுக்கொடுப்பது என்பது முக்கிய கடப்பாடாகும்.இதனை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வருகின்ற 10 ஆம் திகதி 4.00 மணியளவில் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .அதேவேளை என்னுடன் சேர்ந்து சைக்கிள் கட்சியினரையும் அழைத்துள்ளதாக அறிய வந்துள்ளது .
நான் தனி ஒருவன் என்ற முறையிலே என்னையும் அதில் சேர்த்தார்களோ தெரியவில்லை.ஆனால் நான் தனித்து பேசுவது தான் சரியாக தோன்றுகிறது. ஏனெனில் கஜேந்திரகுமாரினுடைய கொள்கைகள் எதிர்மறையானது.
வாக்களிக்க மாட்டேன் ,இதிலே சேர மாட்டேன் என்ற குழந்தைத்தனமான கொள்கைகளோடு எனது கொள்கைகள் வித்தியாசமானது என்ற விதத்தில் இவர்களுடன் இணைந்து செல்வது சரியா? என்பது பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன்.
இதனை உரிய அலுவலகருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன்.
தற்போது உள்ள அரசியல் கைதிகளின் நிலை .எத்தனை வருடங்கள் சிறை வாழ்க்கையினை அனுபவித்துள்ளர்கள்கள் ,அவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுக்கலாம் ,குறிப்பிட்ட காலத்திற்கு புனர் வாழ்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பலாம் ,தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தினை வெளியிட்டுள்ளேன். இது சம்மந்தமாக ரணில் விக்கிரமசிங்க விரைவாக நடவடிக்கை எடுப்பார்.
நேற்றைய தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாகவும்,இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க போவதாகவும் கூறபட்டிருந்தது. யார் கேட்டு இவற்றை செய்ய போகிறார் என்பது முக்கியமில்லை ,எங்களுடைய சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
அவர்கள் இவ்வளவு காலமும் மிகவும் கஷ்ப்பட்டுள்ளார்கள் . எனவே அவர்களுக்கு விடுதலையினை பெற்றுக்கொடுப்பது என்பது முக்கிய கடப்பாடாகும்.இதனை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கையும் எடுத்துக்கொண்டிருக்கிறேன். என்றார்.