
தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை வார இறுதி நாள்களில் குறைப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்காக நீர்தேக்கங்களின் நீர் மட்டம் 62 வீதமாக அதிகரித்ததன் காரணமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
அதேவேளை நாடளாவிய ரீதியில் நாளை வரை மூன்று மணித்தியால மின் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படும்.