கடந்த 2 மாதங்களில் சுமார் 20 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகின!

<!–

கடந்த 2 மாதங்களில் சுமார் 20 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகின! – Athavan News

இலங்கையில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இன்று(வியாழக்கிழமை) வரை 20 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ள இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளே பெரும்பாலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *