புத்தளத்தில் தடைசெய்யப்பட்ட கிருமிநாசினி விற்பனை

புத்தளத்தில் தடைசெய்யப்பட்ட கிருமிநாசினகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் நகரில் கடையொன்றில் தடைசெய்யப்பட்ட கிருமிநாசினிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைவாக, மாவட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகளுடன் இனைந்து கடையொன்றை சோதனை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது காபோபியுரான் 30 பக்கற்றுகள், க்ளைபோர்செட் 100 கிராம், “71”கிருமிநாசினிகள் 6 பக்கற்றுகள், மாஷல் ” 20″ 1 பக்கட் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடையின் உரிமையாளருக்கு எதிராக எதிர்வரும் 9ம் திகதி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *