திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக ஆசிரியை தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் ஆசிரியை, பாடசாலையின் அதிபரருக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில், அதிபர் இன்று இரண்டரை லட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க கடந்த பெப்ரவரி மாதம் 2ம் திகதி திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கடமையேற்பதற்காக சென்றிருந்த ஆசிரியரை ,கடமையேற்க விடாது பல குழப்பங்களை ஏற்படுத்தி, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது சட்டரீதியான கடமையை செய்யத் தடுத்தமை என்ற குற்றச்சாட்டின் பெயரின் கல்லூரி அதிபருக்கு எதிராக,ஆசிரியை திருகோணமலை நீதவன் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றால் அனுப்பப்பட்ட அழைப்பாணையினைத் தொடர்ந்து வழக்கு இன்று (4) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதிபருக்கெதிராக குற்றச்சாட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டது. இரு தரப்பு சட்டத்தரணிகளின் கடுமையான வாதப்பிரதி வாதங்களைத் தொடர்ந்து வழக்கு நீதிபதியினால் விசாரணைக்கு(Trial) எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி குறிப்பிடப்பட்டது.
ஆசிரியைக்கு ஆதரவாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான் றதீப் அஹமட், ஹஸ்ஸான் றுஷ்தி, ஸாதிர் முகம்மட் மற்றும் எம்.எம்.ஏ.சுபாயிர் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.
இந்த வழக்கில் அதிபர் நீதிமன்று குற்றவாளியாகக் காணூமிடத்து இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகள் 183 மற்றும் 184 இன் கீழ் சிறைத்தண்டனை கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
பிறசெய்திகள்