
கொழும்பு,ஓகஸ்ட் 04
குரங்கு அம்மை நோயை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் குரங்கு அம்மை நோய் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பிரதம தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அது ஏற்கனவே நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதை உறுதிப்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கண்டறியப்பட்டால் நோயாளர்களை நிர்வகிப்பதில் நம்பிக்கை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.