
மட்டக்களப்பு வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டது.
சங்க முகாமையாளர் கதிர்காம யாத்திரை சென்றதால் கியூ.ஆர். ஐ பரிசோதிக்க தொலைபேசி இன்மையால் இந்த நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
2 நாட்களாக டீசல் எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்களுக்கு, இன்று டீசல் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவித்து கூட்டுறவு சங்க அலுவலர்களால் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் குறிப்பிட்டது போன்று எரிபொருள் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பின்னர் பொறுமை இழந்தவர்கள் விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும், பொலிஸ் நிலையத்திற்கு சென்று தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து பொலிசார் முறைப்பாடு பதிவு செய்ததுடன்,பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்தபண்டார சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை கேட்டறிந்தார்.
இதனையடுத்து குழப்ப நிலைமையை சீர்செய்ய கியூ.ஆர். குறியீட்டு பிரதியினை பெற்று எரிபொருள் வழங்குமாறு பொலிசாரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.இதனையடுத்து எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் அரசினால் அனுமதி வழங்கப்பட்ட கியூ.ஆர். குறியீட்டின் அடிப்படையிலான எரிபொருள் அளவு வழங்கப்படவில்லையென மக்கள் கவலை தெரிவித்தனர்.
பிறசெய்திகள்