வீதியில் கண்டெடுத்த தங்க நகைகளை உரிமையாளரிடம் கொடுத்த மதுரங்குளி பொலிஸார்!

வீதியில் கிடந்த சுமார் பெறுமதியான தங்க நகைகள் அடங்கிய கை பையை கண்டுபிடித்த மதுரங்குளி பொலிஸார் அதனை உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பொதுமக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

புத்தளம் – கொழும்பு வீதியின் மதுரங்குளி பொலிஸ் பிரிவில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் டி.எச்.எம். ருவான் (9099)  என்பவர் வீதியில் வீழ்ந்து கிடந்த ஒரு சிறிய பையை எடுத்துள்ளார்.

அந்த பையில் பெறுமதியான தங்க நகைகள் காணப்பட்டுள்ளன. அந்த தங்க நகைகள் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கண்டெடுத்த குறித்த பையை அந்த பொலிஸ் சார்ஜன்ட் மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.

மேற்படி கைப் பையில் இருந்த தேசிய அடையாள அட்டையின் தகவலின் படி, தங்க நகைகள் இருந்த கைப் பையின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டதுடன், இதுதொடர்பில் அவருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர், குறித்த தங்க நகைகளின் உரிமையாளர் மதுரங்குளி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் காமினி விக்கிரமசிங்க மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ருவன் ஆகியோர் அந்த பையை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *