
மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரரான டானிஸ் அலி, சிறைச்சாலைக்குள் தொலைபேசி பயன்படுத்தியக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் அவருக்குப் 14 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்தக் குற்றச்சாட்டின் கீழ், கடந்த மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த டானிஸ் கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறைச்சாலையில் அவர் பயன்படுத்திய தொலைபேசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேவேளை, டானிஸ்க்கு எவ்வாறு தொலைபேசி கிடைத்தது என்பது தொடர்பிலும் சிறைச்சாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்