ரணில் – சஜித் தரப்பிற்கு இடையில் இன்று சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் சர்வக்கட்சி அரசாங்கம் மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் தொடர்பில் பேச்சு நடத்தப்படவுள்ளன.

சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டை பெறும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். கட்சிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்திவருகின்றார்.

இதன் ஒரு அங்கமாகவே பிரதான எதிர்க்கட்சியுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.

அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *