தொடரும் சீரற்ற காலநிலை – 13 ஆயிரத்து 739 பேர் பாதிப்பு!

மத்திய மாகாணம் உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3 ஆயிரத்து 471 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார்.

நால்வர் காயமடைந்துள்ளதுடன், ஆயிரத்து 150 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

137 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் உறவினர்கள் வீடுகளிலும், இடைத்தங்கல் முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கே கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *