தொடரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் – நேற்றிரவும் இருவர் படுகொலை!

தென்னிலங்கையில் நேற்றிரவும்(வியாழக்கிழமை) இரு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுஹம்வெஹர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதன்போது 34 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, காலி – அஹங்கம கொவியாபான பகுதியிலும் நேற்றிரவு  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த  இரு இடங்களிலும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் வெளிவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மே 30 ஆம் திகதி முதல் நேற்றுவரை 21 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *