பேருந்தொன்று 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு, 13 பேர் காயம்!

பூண்டுலோயாவிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பூண்டுலோயா – கொத்மலை பிரதான வீதியில் மல்லாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பூண்டுலோயா பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கம்பளை பகுதிக்கு சென்ற குறித்த பேருந்தானது. வீதியை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் பாய்ந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த வீதியானது வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதன் காரணமாக பேருந்தின் சாரதிக்கு பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 13 பேரும், கொத்மலை வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், சிலர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் புஸ்ஸலாவ நவகடதொர பகுதியை சேர்ந்த தம்மிக்க ஹேமந்த யாப்பா எனும் 56 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பாக பூண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *