பிறந்தநாள் பரிசாக கிராம உத்தியோகத்தருக்கு கொடுக்கப்பட்ட பெற்றோலால் பரபரப்பு!

நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

அதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கியூஆர் நடைமுறைகளாலும் எரிபொருள் வரிசைகள் இன்று வரை குறைந்தபாடில்லை.

யாழில் கிராம உத்தியோகத்தரின் பிறந்த நாளுக்கு ஊர்ப் பொதுமக்கள் இணைந்து பெற்றோலைப் பரிசாக வழங்கிய சம்பவமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .

ஜே / 363 கிராம உத்தியோகத்தரின் பிறந்தநாள் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற போதே இவ்வாறு பெற்றோல் பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது .

இதேவேளை , மேற்படி கிராம உத்தியோகத்தரின் பணிகளை இடையூறின்றி மேற்கொள்ளும் பொருட்டே பிறந்தநாளில் பெற்றோல் வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *