நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும்

அதற்கமைய இன்றைய தினத்திலிருந்து குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி இன்றைய தினத்திற்கு பின்னர் எரிவாயு விலை நிச்சயம் குறையும் என்பதை தான் பொறுப்புடன் கூறிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவித்திருப்பதாவது

ஒகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்கள் வரை நாட்டிற்கு வரும் கப்பல்கள் தொடர்பில் திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது கொள்வனவு செய்யப்பட்டவைகள் அனைத்தும் விநியோகிக்கப்படும்.

இனிமேல் ஒரு போதும் எரிவாயு வரிசைகள் ஏற்படாது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *