மவுசாகலை நீர் தேக்கங்களின் நீர் வரத்து அதிகரிப்பு!(படங்கள் இணைப்பு)

காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர் தேக்கங்களின் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் இரு நீர் தேக்கமும் இன்னும் 18 அங்குலமே நிரம்ப வேண்டும் என லக்சபான நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஐந்து தினங்கள் அதிகளவில் நீர் மின் உற்பத்தியை அதிகரித்துள்ளதாகவும் இதனால் நாட்டில் தற்போது மின் வெட்டு குறைந்தது என அவர் கூறினார்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்னும் இரண்டு ஒரு தினங்களில் இந்த இரண்டு நீர் தேக்கம் முழுமையாக நிறைந்து விடும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *