300 லீற்றருக்கும் அதிகமான எரிபொருளுடன் இருவர் கைது!

373 லீற்றர் எரிபொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் லொறியில் 300 லீற்றர் பெற்றோலை ஏற்றிச் சென்றதுடன், அக்குரஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியில் இந்துருகாவ கோவிலுக்கு அருகில் உள்ள வீதித் தடுப்பில் நேற்று (04) பொலிஸார் லொறியை சோதனையிட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயதான சந்தேக நபர் டிக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர். இதேவேளை, ஹொரணை – புஹுலாவ – தம்பர மாவத்தையிலுள்ள கடையொன்றில் 73 லீற்றர் டீசல் பதுக்கி வைத்திருந்த நபரையும் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *