பெற்றோல் விநியோகத்திற்கு QR கோட் முறை முழுமையாக அறிமுகப்படுத்தப்பட்டு வாகனங்களின் கடைசி இலக்கம் அடிப்படையில் விநியோகம் செய்யும் முறையும் கைவிடப்பட்ட பின்னர் முன்னேற்றகரமான ஒரு நிலைமையை இன்று காண முடிகின்றது.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெற்றோல் விநியோகம் செய்யும் இடங்களில் பெருமளவுக்கு நெரிசல் இன்றி வாகனங்கள் பெற்றோல் பெறுவதைக் காண முடிகின்றது.
எந்தெந்த பெற்றோல் செற்றுகளில் எப்போது பெற்றோல் விநியோகம் செய்யப்படும் என்ற விபரத்தை முன்கூட்டியே அறிவிப்பதில்லை என்று யாழ்ப்பாண அரசாங்க அதிபரால் எடுக்கப்பட்ட முடிவும் அதிகம் பேர் திரள்வதைக் குறைத்துள்ளதனைக் காண முடிகின்றது.
QR கோட் முறையில் மோட்டார் சைக்கிள்களுக்கு தலா 4 லீற்றர் பெற்றோல் ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் முறை பெருமளவான மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களுக்கு பெருமளவுக்குப் போதுமானதாக உள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
தற்போது வீதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாகி வருகிறது.
பிற செய்திகள்