
மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன் போது சமூக ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,
நேற்றைய முன்தினம் இலங்கை ஆசிரிய சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இலங்கை காவல் துறையினரால் அராஜகமான முறையிலே கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றதன் பிற்பாடு தன்னை மக்கள் விரும்பவில்லை அதனால் தன்னை கதிரையில் இருந்து போராடி விரட்டி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக ஒரு அரச பயங்கரவாதத்தின் மூலம் பாசிசவாத ஆடசியின் மூலம் காவல் துறையினரை ஏவி ஜனநாயக போராட்ட செயற்பாட்டாளர்களை கைது செய்து வேடடையாடுகின்ற செயற்பாட்டினை செய்துகொண்டிருக்கிறார்.
அதன் ஒரு அங்கமாக இலங்கைக்கியின் மிகப்பெரிய தொழிற்சங்கங்களின் ஒன்றான ஜனநாயக ரீதியாகவும் ,கல்வியினை பாதுகாப்பதற்காகவும் ,உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற இலங்கை ஆசிரிய சங்க பொதுச் செயலாளரினை கைது செய்தமையினை மிக வன்மையாக கண்டித்து இன்றைய தினம் பொது அமைப்புக்களுடன் இணைந்து இந்த கண்டன போராடடத்தினை நடாத்தியிருந்தோம்.
ஜோசப் ஸ்டாலினையும் அவரோடு ஏனைய போராட்ட செயற்படடாளர்கள் ,மதகுருக்கள் மற்றும் சிவில் சேவை அமைப்புக்களின் செயற்பாடடாளர்கள் என பலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வன்முறை சாயம் பூசப்பட்டு ,பொய் வழக்குகள் சோடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் ,எனவே அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக இருக்கிறது.
விடுதலை செய்யப்படவில்லை என்றால் தொடர்ந்தும் இவ்வாறான போராட்டங்களுக்கு இந்த அரசு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும்.
ரணில் விக்கிரமசிங்க சொந்த சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்டு அதற்கு பிற்பாடு ராஜபக்ஷக்கள் சிங்கள மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட நிலைமையிலேயே அந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி கதிரையில் அமர்ந்து கொண்டு இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது ஒன்றல்ல என்றார்.
பிற செய்திகள்