கொஸ்வத்தை மகாநாம தேரருக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசிய பிக்கு பெரமுனவின் உறுப்பினர் வணக்கத்துக்குரிய கொஸ்வத்தே மகாநாம தேரரை விடுதலை செய்யுமாறு கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி கோட்டை சிலோன் வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட அவர், நேற்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *