QR குறியீடு தொடர்பான எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு!

மக்கள் தங்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பான QR குறியீட்டை மற்ற தரப்பினர் பெற்றுக்கொள்ளும் வகையில் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மக்களைக் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட QR குறியீடுகளை ஏனைய தரப்பினர் புகைப்படம் எடுத்து எரிபொருளைப் பெற்ற சந்தர்ப்பங்களும் உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே தாங்கள் தற்போது பயன்படுத்தும் QR குறியீட்டை ரத்து செய்து அதற்கான புதிய குறியீட்டை பெறுவதற்கான வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருளைப் பெறுவதற்கு 53 இலட்சத்து 98 ஆயிரத்து 63 பேர் பதிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *