அடுத்த வாரம் நாடாளுமன்றக் குழு ஸ்தாபிப்பு!

பாராளுமன்ற அமர்வு முடிவடைந்தவுடன் இரத்து செய்யப்பட்ட பொது அலுவல்களுக்கான பாராளுமன்ற குழு (COP) மற்றும் பொது கணக்குகளுக்கான பாராளுமன்ற குழு (COPA) உட்பட அதன் அனைத்து குழுக்களையும் ஸ்தாபிப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் குழுக்களை அமைப்பதற்கான பிரதான பொறிமுறையான தெரிவுக்குழு எதிர்வரும் 9ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றக் குழுக்களுக்கு அந்தந்த அரசியல் கட்சிகளால் முன்மொழியப்படும் உறுப்பினர்களுக்கான வேட்புமனுக்கள் அடுத்த வாரம் கோரப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம், ஒரு சிலவற்றைத் தவிர கிட்டத்தட்ட எழுபது பாராளுமன்றக் குழுக்கள் ஒழிக்கப்பட்டன.

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் ஒழிக்கப்படாத குழுக்கள் உயர் அதிகாரிகளுக்கான பாராளுமன்றக் குழு, துறைசார் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பாராளுமன்ற விசேட குழுக்கள் ஆகும்.

குழுக்கள் இல்லாதொழிக்கப்பட்டாலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை அங்கிருந்து முன்னெடுக்க முடியும் என பாராளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த மாதம் 28ஆம் திகதி பாராளுமன்றம் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *