மாகாண சபை முறையை தனி நபர்கள் பலவீனப்படுத்த முயற்சி-வடக்கு ஆளுநர் குற்றச்சாட்டு!

 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட  அதிகாரத்தை பலவீனப்படுத்துவதற்கு சில தனிநபர்கள் முயற்சிக்கின்றனர் என வட மாகாண  ஆளுநர் ஜீவன் தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது மாகாண சபை முறைமையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என பல மாகாணங்கள் போராடும் நிலையில்  உரத்த குரலில் பேசும் சிலரின் செயற்பாடுகள் மாகாண அதிகாரங்களை தவறான பாதையில் சித்தரிப்பதாக அமைகிறது.

வடக்கு மாகாண அபிவிருத்திக்காக பெருநகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து 25க்கு மேற்பட்ட நிறுவனங்கள் மாகாணத்தில் பணியாற்றியுள்ளன.

மேலும் மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி ரனில் விக்ரம சிங்கவிடம் தெளிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நோர்வே நாட்டின் மாகாண ஓய்வூதிய திட்டம் வழங்கும் நடைமுறை தொடர்பில் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *