
சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாளை 1500 அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் பெற்றோல் வழங்கப்படவுள்ளது.
அந்தவகையில் ஆண்கள் 750 பேருக்கும் பெண்கள் 750 பேருக்கும் இவ்வாறு பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது. இதன்போது திணைக்கள அடையாள அட்டை கியூ.ஆர் குறியீடு என்பன எடுத்துச் செல்லுதல் வேண்டும்.
இன்றும் அரச உத்தியோகத்தர்கள் 200 பேருக்கும், ஆசிரியர்கள் 100 பேருக்கும், பொதுமக்கள் 800 பேருக்கும் தனித்தனி வரிசையில் பெற்றோல் வழங்கப்பட்டது. பாடசாலைகள் இயங்குகின்ற நிலையில் ஆசிரியர்கள் எரிபொருளுக்கு எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இன்று இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டது.
சங்கானை பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் மற்றும் இயக்குனர் சபையின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வலி. மேற்கு பிரதேச செயலகத்தின் மேற்பார்வையுடன் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுவருகிறது.
இதேவேளை கியூ.ஆர் நடைமுறை பின்பன்றலின்போது குறித்த இலக்கினை அடைந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த நிலையமும் உள்வாங்கப்பட்டதனால் மேலதிக எரிபொருள் இந்த நிரப்பு நிலையத்திற்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கர்ப்பிணி தாய்மாருக்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பிலும் மேற்படி சங்கம் கவனம் செலுத்திவருகிறது.
பிற செய்திகள்