ஜோசப் ஸ்டாலின் மனு மீது நீதிமன்ற உத்தரவு!

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கான பிணை உத்தரவு எதிர்வரும் 8ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்றையதினம் (05) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திரு.ஜோசப் ஸ்டாலின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மனுவொன்றை சமர்ப்பித்து தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை நேற்றையதினம்(05) அறிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *