யுவதியின் தங்க தங்கியை அறுத்த திருடன்; நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைப்பு!

இளம் பெண்ணின் தங்க தங்கியை அறுத்த திருடனை நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி நகர் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி சென்ற பெண்ணை பின்தொடர்ந்த நபர் ஒருவரே குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி அணிந்திருந்த சங்கிலியை அறுக்க முற்பட்ட போது, யுவதி தடுக்க முயற்சித்ததுடன், மக்களின் உதவியை கோரி சத்தமிட்டுள்ளார்.

இதன்போது, குறித்த திருடன் கூரிய ஆயுதத்தால் யுவதியை காயப்படுத்தியதுடன், சங்கிலியை அறுத்து தப்பி செல்ல முற்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அப்பகுதியில் திரண்ட மக்கள் குறித்த திருடனை மடக்கி பிடித்து நையப்புடைத்ததுடன், சங்கிலியை மீட்டு யுவதியிடம் கையளித்தனர்.

தொடர்ந்து, பொலிசாரை அழைத்து திருடனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *