வற்றாப்பளை ஆலய வழக்கு . தடையுத்தரவு மேலும் நீடிப்பு!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீதி மன்று மேலும் நீடித்துள்ளது .

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் 30 ஆண்டுகாலமாக மோசடி இடம்பெற்று வருகின்றது எனத்தெரிவித்து ஆலய நிர்வாகத் தலைவர் . செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோருக்கு எதிராக நிர்வாக உறுப்பினர்கள் சிலர் வழக்குத் தாக்கல் செய்தனர் . இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது தலைவர் , செயலாளர்.பொருளாளர் ஆகியோருக்கு இடைக்காலத் தடை உத்தரவு மன்றினால் பிறப்பிக்கப்பட்டது .

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிர்வாக உறுப் பினர்களின் தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது . அத்துடன் இந்த வழக்கு விசாரணையை எதிர் வரும் 28 ஆம் திகதிக்கும் நீதிமன்று ஒத்திவைத்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *