கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக முற்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றிச செல்லப்பட்ட டீசல் கொள்கலன்கள் பொலிஸாரால் சுற்றி வலைக்கப்பட்டு நேற்று (05) மாலை கைப்பற்றப்பட்டது.
குறித்த சுற்றி வலைப்பின்போது 200 லீட்டர் டீசல் மற்றும் 100 லீட்டர் பெற்றோலும் கைப்பற்றப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கிண்ணியா முனைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து முச்சக்கரவண்டியில் எரிபொருளை எடுத்து செல்லும் வழியிலேயே பொலிசாரால் குறித்த முச்சக்கர வண்டி மடக்கிப்பிடிக்கப்ட்டு 04 கொள்கலன்களும் அவர்களது வீட்டிலிருந்து 4 கொள்கலன்களும் அடங்கலாக 8 கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல் எரிபொருள் கலன்களை சந்தேக நபர்கள் எடுத்து சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிண்ணியா சூரங்கள் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும், திங்களன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாவும் கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பெர்ணாண்டோ தெரிவித்தார்.
பிற செய்திகள்