நுணாவில் ஐ.ஓ.சி. நிரப்பு நிலையத்தில் மதகுருமார்களுக்கு இன்று எரிபொருள் விநியோகம்!

நுணாவில் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று சனிக்கிழமை வடமா காணத்தில் உள்ள மதகுருமார்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெற்றோல் விநியோகிக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமை யாளர் வை.சிவராசா அறிவித்துள்ளார் .

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;

சனிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் 1.30 மணி வரை வடமாகாணத்தில் உள்ள கத்தோலிக்க மதகுருமார்களுக் கும் பிற்பகல் 2 மணி தொடக்கம் 4.30 மணிவரை வடமாகா ணத்தில் உள்ள இந்து மற்றும் ஏனைய மதகுருமார்களுக்கும் நுணாவில் ஐ.ஓ.சி.யில் முன் னுரிமை அடிப்படையில் பெற் றோல் வழங்கிவைக்கப்படும் .

அதேவேளையில் சனிக் கிழமை முற்பகல் 10 மணி தொடக்கம் 12 மணி வரை ஜே / 311 தொடக்கம் ஜே / 313 வரையான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் OR முறைமையின் கீழ் பெற்றோல் விநியோகிக்கப்படும் .

எரிபொருள் பெற வருபவர்கள் தமது பிரதேசத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினை கைவசம் வைத்திருக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *