
நுணாவில் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று சனிக்கிழமை வடமா காணத்தில் உள்ள மதகுருமார்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெற்றோல் விநியோகிக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமை யாளர் வை.சிவராசா அறிவித்துள்ளார் .
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;
சனிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் 1.30 மணி வரை வடமாகாணத்தில் உள்ள கத்தோலிக்க மதகுருமார்களுக் கும் பிற்பகல் 2 மணி தொடக்கம் 4.30 மணிவரை வடமாகா ணத்தில் உள்ள இந்து மற்றும் ஏனைய மதகுருமார்களுக்கும் நுணாவில் ஐ.ஓ.சி.யில் முன் னுரிமை அடிப்படையில் பெற் றோல் வழங்கிவைக்கப்படும் .
அதேவேளையில் சனிக் கிழமை முற்பகல் 10 மணி தொடக்கம் 12 மணி வரை ஜே / 311 தொடக்கம் ஜே / 313 வரையான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் OR முறைமையின் கீழ் பெற்றோல் விநியோகிக்கப்படும் .
எரிபொருள் பெற வருபவர்கள் தமது பிரதேசத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினை கைவசம் வைத்திருக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்