பங்குச் சந்தையின் தினசரி வருவாய் 3 பில்லியனை தாண்டியது!

நீண்ட காலத்தின் பின்னர் கொழும்பு பங்குச்சந்தையின் தினசரி புரள்வு 3 பில்லியன் ரூபாவை நேற்று முன்தினம் கடந்துள்ளது . இதன்படி , கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனைகளின் முடிவில் 3.79 பில்லியன் ரூபாய் பரிவர்த்தனை புரள்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் , நேற்று முன்தின வர்த்தக முடிவில் அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண்களும் 149.00 புள்ளிகள் அதிகரித்து 8,229.14 புள்ளிகளாகவும் .S & P Sri Lanka 20சுட்டெண் 91.62 புள்ளிகள் அதிகரித்து 2.677.67 புள்ளிகளாகவும் காணப்பட்டன .

இந்த அதிகரிப்பு முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் முறையே 1.84 சதவீதம் மற் றும் 3.54 சதவீத அதிகரிப்பாகும் . 114 நிறுவனங்களும் இந்தப் பங்கு விலைக்குறியீட்டின் அதிகரிப்புக்கு சாதகமான பங்களிப்பைச் செய்துள்ளன . தொடர்ந்து மூன்றாவது நாளாக அனைத்துப் பங்கு விலைக்குறியீடுகளும் 100 புள்ளிகளைத் தாண்டியிருப்பது சிறப்பு.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *