இலங்கையின் 58 இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை: வலியுறுத்தும் மனித உரிமைகள் ஆணையாளர்!

இலங்கையின் 58 இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கு சர்வதேச நீதி அமைப்பை பயன்படுத்துமாறு 47 நாடுகளின் அதிபர்களுக்கு ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்செல் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகங்களுக்கு வெளியிட்ட செவ்வியில் இவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ வீரர்களுக்கு எதிராக இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய மிச்சேல் பச்செல், முதன்முறையாக சர்வதேச நீதி அமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால், குறித்த இராணுவ வீரர்கள் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *