பெட்ரோலியம் வர்த்தகம் செய்யும் புதிய நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழு

எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு நேற்று நியமிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக பல நிறுவங்கள் ஈடுபட முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக எட்டு பேர் கொண்ட குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டது.

குழுவின் பரிந்துரைகளை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறும் அமைச்சர் விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *