தேநீர் மற்றும் உணவுப்பொதி ஆகியவற்றின் விலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கு 10 வீதமாக குறைப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டரின் விலையை எதிர்வரும் 8ஆம் திகதி நள்ளிரவுடன் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்