தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரனும், இரா.சாணக்கியனும் தங்களது அதிகாரங்களை தக்கவைத்திருப்பதற்கான செயற்பாடுளில் ஈடுபட்டு மக்களையும், சர்வதேசத்தினையும் பேக்காட்டுகிறார்கள் என தமிழ் பண்பாட்டு பேரவையின் தலைவர் நிஷாந்தன் தெரிவித்திருந்தார்.
இன்றைய தினம் யாழ்.ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த்திருந்தார்.
பயங்கரவாத தடைச் சட்டமானது சிங்களவர்கள் அல்லாது தமிழர்களை அடக்கி ஒடுக்கி இருக்கின்றது. இதற்கு தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களில் இளைஞர்கள் பங்குபற்றாமல் இருப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் இருப்பதனாலேயேயாகும். இந்த பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாதுவிட்டால் எமது சிறுபிள்ளையும் காலத்தில் நிற்கும்.
பாராளுமன்றத்திலுள்ள தமிழ் உறுப்பினர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டு 12 வருடங்களுக்கு மேலாகியும் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குதல் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலைக்கும் இவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சம்மந்தன் தலைமையில் பாராளுமன்றத்தில் அல்லது காலி முகத்திடலில் முன்னால் ஒரு உண்ணாவிரத போராட்டத்தினை நிகழ்த்துகிறோம் என அமரட்டும்.
இவ்வாறு இவர்கள் போராட்டத்தினை நிகழ்த்தினால் உடனடியாக அத்தனை நாடுகளும் இதை தான் பார்க்க போகிறது, இதனால் சர்வதேசத்தின் அழுத்தங்களினால் உடனடியாக அரசியல் கைதிகள் விடுதலையும், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுவதற்கும் வழிவகுக்கும். ஆனால் இதை செய்வதற்கு இவர்கள் முன் நிற்பதில்லை.
பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க போகிறோம் என கிழக்கில் இருந்து சாணக்கியனும், வடக்கிலிருந்து சுமந்திரனும் யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக படம் போட்டுக்கொண்டிருந்தார்கள். இவ்வாறாக மலையகம் வரை சென்றிருந்தார்கள்.
மக்களை ஏமாற்றால் இருக்க வேண்டும் என்றால் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க போகிறோம், 8 மாகாணங்களில் உள்ள தமிழர்களும் இணைய வேண்டும், இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஒரு சரியான கட்டமைப்பினை தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிவித்ததன் பிற்பாடு ஆரம்பித்திருந்தால் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்காது.
இவர்கள் சர்வதேசத்தினை பேக்காட்டுகிறார்கள். இது தான் உண்மை. சுமந்திரனும், சாணக்கியனும் தங்களது அதிகாரங்களை தக்க வைத்திருப்பதற்காக இவ்வாறன நிகழ்ச்சி செயற்பாடுகளில் செயற்படுவதாலும் மக்களை முட்டாள்கள் ஆக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
எனவே மக்களினை பேய்க்காட்டுகின்ற விடயங்களில் ஈடுபட வேண்டாம். சர்வதேச அரசாங்கத்தினை அமைக்கின்ற விடயத்தில் பல குழப்பங்கள் இருக்கின்றன, ரணில் ஜனாதிபதிபதவிக்கு வந்ததற்கு ஆதரவினை ஒரு தரப்பினர் கொடுக்கவில்லை, மற்ற தரப்பினர் ஆதரவு கொடுத்தார்கள் என்ற விளையாட்டுகள் பாராளுமன்றத்தில் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெரும் பட்சத்தில் அதனை வெளியிடுவோம். – என்றார்.