வடக்கு மாகாணத்தில் கொவிட் – 19 நோய்த் தடுப்பூசிகளை வழங்கும்போது வாராந்த தரவுகளை தனக்கு அனுப்புமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது கொவிட் – 19 தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமது பிரிவுகளில் உள்ள சுகாதாரத் தரந்பினரின் அறிவுறுத்தல்களுக்கு அமையப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் வடக்கில் கட்டணம் செலுத்தப்படும் சுகாதாரத் துறை சார்ந்த சமூக பராமரிப்பாளர்களை மாகாண கூட்டுறவின் கீழ் இணைத்து அவர்களுக்கான NVQ பயிற்சிகளை வழங்கி சேவையில் ஈடுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
பிற செய்திகள்