கட்டுப்பாடின்றி தொடந்து எகிறும் அரிசி விலை

நாட்டில் அரிசியின் விலை தொடர்ந்தும் கட்டுப்பாடின்றி அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.

இதற்கமைய, புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

எனினும், இந்தியாவிலிருந்து மாத்திரமின்றி பாகிஸ்தான், மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அண்மையில் அறிவிக்கப்பட்டதோடு, சந்தையில் ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாடு காரணமாக அதும் நீக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு கிலோ நாட்டரிசி 115 ரூபா எனவும், ஒரு கிலோ சம்பா அரிசி 140 ரூபா எனவும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 165 ரூபா எனவும் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் டன் அரிசியை கட்டம் கட்டமாக இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசி சதொச ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஆனாலும், நுகர்வோருக்கு 5 கிலோ அரிசி மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விலையை மீறி அதிக விலைகளில் சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *